கார்பன் சமநிலைக்கான அறிவிப்புகளை வெளியிட்ட காலநிலை மாற்ற நிறுவனம் Proclime!
சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காலநிலை பரப்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை நிறுவனம் புரோகிளைம் (ProClime), இந்திய தொழிலக கூட்டமைப்பு மாநாட்டில் கார்பன் சமநிலை தன்மை தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.
சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காலநிலை பரப்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை நிறுவனம் 'ப்ரோகிளைம்' (ProClime), இந்திய தொழிலக கூட்டமைப்பு மாநாட்டில் கார்பன் சமநிலை தன்மை தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.
மின் வாகன போக்குவரத்து சார்ந்த கார்பன் கிரெடிட்களை ஐரோப்பிய பங்குதாரர்களோடு அறிவித்துள்ளதோடு, லண்டன் நிறுவனம் ஒன்றின் கூட்டுடன், கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மண்ட் மெக்கானிசத்திற்கான ஆலோசனை சேவையை அறிவித்தது. இந்த முன்னெடுப்புகள் இந்திய நிறுவனங்கள் குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாற வழி செய்யும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
புரோகிளைம் நிறுவனத்தை முதன்மை பங்குதாரராகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, இந்திய தொழிலக கூட்டமைப்பால் (CII) ஏற்பாடு செய்யப்பட்டது. கார்பன் சமநிலை மற்றும் காலநிலை கூட்டு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மாநாட்டில், அரசு அதிகாரிகள், கல்வி துறை வல்லுனர்கள், தொழில்துறை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹு, மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர் சந்தோஷ் குமார் சாஹு, பல்லவி தாஸ் உள்ளிட்டோர் இதில் உரையாற்றினர்.
“கார்பன் சந்தையின் ஆற்றலை பல்வேறு அரசு அமைப்புகளுக்கு கொண்டு வருவதிலும், இயற்கை முதல் தொழில்நுட்பம் வரை அதிக நம்பகத்தன்மை கொண்ட திட்டங்களை உருவாக்க இணைந்து செயல்படுவதிலும் பெருமை கொள்கிறோம். எங்கள் இரண்டு முக்கிய அறிவிப்புகள், கார்பன் சந்தையின் ஆற்றலை நல்லவிதமாக பயன்படுத்துக்கொள்ளும் வகையில் அமைகிறது,” என்று புரோகிளைம் சி.இ.ஓ கவின் குமார் கந்தசாமி கூறினார்.
நல்லவிதமான மாற்றத்திற்காக காலநிலை மாற்ற நெருக்கடியை அணுகும் நிறுவனமான புரோகிளைம், கார்பன் திட்டங்கள், கார்பன் வர்த்தகம், காலநிலை மாற்ற முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
Edited by Induja Raghunathan