Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

தமிழ்நாடு தொழில்முனைவு ஊக்க அமைப்பிடம் இருந்து 4,70,000 டாலர் நிதி பெற்ற சென்னை ஸ்டார்ட் அப் 'Torus Robotics’

மின் வாகனங்கள், பாதுகாப்பு, விமானத்துறை மற்றும் நுகர்வோர் சந்தைக்கான ஆழ் நுட்பம் சார்ந்த உள்நாட்டு பவர்டிரைன் தொழிநுட்ப சேவைகளை வழங்கும் Torus Robotics, தமிழ்நாடு இன்பிராஸ்டக்சர் பண்ட் மேனஜ்மெண்ட் கார்ப்பரேஷனிடம் இருந்து, தமிழ்நாடு வளரும் துறை விதை நிதி (TNESSF) பெற்றுள்ளது.

தமிழ்நாடு தொழில்முனைவு ஊக்க அமைப்பிடம் இருந்து 4,70,000 டாலர் நிதி பெற்ற சென்னை ஸ்டார்ட் அப் 'Torus Robotics’

Wednesday February 14, 2024 , 2 min Read

மின் வாகனங்கள், பாதுகாப்பு, விமானத்துறை மற்றும் நுகர்வோர் சந்தைக்கான ஆழ் நுட்பம் சார்ந்த உள்நாட்டு பவர்டிரைன் தொழிநுட்ப சேவைகளை வழங்கும் டோரஸ் ரோபோடிக்ஸ் (Torus Robotics Pvt Ltd), தமிழ்நாடு இன்பிராஸ்டக்சர் பண்ட் மேனஜ்மெண்ட் கார்ப்பரேஷனிடம் (TNIFMC), இருந்து, தமிழ்நாடு வளரும் துறை விதை நிதி (TNESSF) கீழ் 4,70,000 டாலர் நிதி பெற்றுள்ளது.  

இந்த நிதி சுற்றில், கோவையின் போர்ஜ் இன்னவேஷன் அண்ட் வென்சர்ஸ், பாம்பே ஐஐடியின் புதுமையாக்கம் மற்றும் தொழில்முனைவு கழகம் (SINE) உள்ளிட்டவை பங்கேற்றன.  

torus

ஆய்வு மற்றும் மேம்பாடு செயல்பாடுகளை விரிவாக்கவும், அதி நவீன நுட்பங்களை ஆய்வு கூடத்தில் இருந்து சந்தைக்கு விரைவாக கொண்டு வரவும் இந்த நிதியை பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதுமையாக்கம் மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட மற்ற முக்கிய அம்சங்களுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


மின் வாகனங்களை மேலும் செயல்திறன் மிக்கதாகவும், வேகமாக மற்றும் வாங்கக்கூடிய விலை கொண்டதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தும் இந்த நிறுவனம், மின்வாகன போக்குவரத்தில் முக்கிய இடத்தை அடைய திட்டமிட்டுள்ளது.

“ஆக்சியல் பிளக்ஸ் மோட்டார்களை உருவாக்குவதில் டோரஸ் நிறுவனத்தின் தனித்துவனமான அணுகுமுறை, மாநிலத்தில் புதுமையாக்கம், மற்றும் ஆய்வு சூழலை ஊக்குப்படுத்தும் தமிழ்நாடு இன்பிராஸ்டக்சர் பண்ட் மேனஜ்மெண்ட் கார்ப்பரேஷன் நோக்கத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சி டோரஸ் நிறுவனத்தின் வர்த்தகமயமாக்கும் செயல்பாடுகளுக்கு உதவியாக அமையும்,” என்று தமிழ்நாடு வளரும் துறை விதை நிதியின் கார்திக் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
“இந்த நிதி, ஆய்வு பணிகளில் மேலும் முதலீடு செய்து, மின்வாகனத்துறையில் மாறிவரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் சேவைகள் அளிக்க உதவும். மின்வாகன போக்குவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எங்கள் ஈடுபாடு வலுவாக இருக்கிறது. வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று டோரஸ் ரோபோடிக்ஸ் இணை நிறுவனர் விபாகர் செந்தில் கூறியுள்ளார்.

சென்னையில் 2019ம் ஆண்டில் விக்னேஷ்.எம், விபாகர் செந்தில் மற்றும் அபி விக்னேஷ்.கே ஆகியோரால் டோரஸ் ரோபோடிக்ஸ் துவக்கப்பட்டது. மின்வாகன சந்தை பவர்டிரைன் பொருட்களுக்காக இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.


மேலும், சந்தையில் உள்ள தீர்வுகள் செயல்திறன் குறைந்ததாகவும், அளவில் பெரியதாகவும் உள்ளன. இதற்கு மாறாக, டோரஸ் நிறுவனம், ஆக்சியல் பிளக்ஸ் மோட்டார்ஸ் மற்றும் கண்ட்ரோலர்ஸ் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது. உள்ளூர் பொருட்கள் சார்ந்த தயாரிப்புக்கு உதவுவதோடு, இதன் கச்சிதமான தன்மையும் சாதகமாக அமைகிறது.


ஐநா சபையின் தொழில் மேம்பாடு அமைப்பின் கீழான FLCTD திட்டத்தின் வாயிலாக இந்த ஸ்டார்ட் அப், மின்வாகனங்கள், எரிசக்தி துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தனக்கான நிதியை பெற்றுள்ளது. இதன் தொழில்நுட்பம், இந்திய தொழிலக கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் தர நிர்ணயத்தை பெற்றுள்ளது,


துவக்க நிலையில் ஸ்டார்ட் அப் டிஎன், மற்றும் தமிழ்நாடு தொழில்முனைவு மேம்பாடு, புதுமையாக்க கழகத்தின் நிதி ஆதரவை பெற்றது.  


மேலும், மின் வாகன சந்தையை கடந்து உள்ள வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. எரிசக்தி உற்பத்தி, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துகிறது.


Edited by Induja Raghunathan